வியாழன், டிசம்பர் 21, 2017

குறள் எண்: 0872 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0872}

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை

விழியப்பன் விளக்கம்: வில்லை ஏராகக் கொண்ட உழவராம், படைவீரரோடு பகை கொண்டாலும்; சொல்லை ஏராகக் கொண்ட உழவராம், படைப்பாளியோடு பகை கொள்ளக்கூடாது!.
(அது போல்...)
அன்பை சிறகாய் கொண்ட பறவையாம், செயலில் குறை இருப்பினும்; அறத்தை சிறகாய் கொண்ட பறவையாம், சிந்தனையில் குறை இருக்கக்கூடாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக