புதன், டிசம்பர் 02, 2015

குறள் எண்: 0122 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0122}

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

விழியப்பன் விளக்கம்: அடக்கத்தை, செல்வமாக நினைத்து காக்கவேண்டும்; அதைக்காட்டிலும் பெருஞ்செல்வம் ஏதும் மனிதர்க்கு இல்லை.
(அது போல்...)
கடனில்லாததை, நிம்மதியாய் எண்ணி அடையவேண்டும்; அதைவிட, அதீத-நிம்மதி எதுவும் இவ்வுலகில் இல்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

2 கருத்துகள்:

  1. கடனில்லாததை சொத்தாக நினைத்து பழகவேண்டும்; அதைக்காட்டிலும் பெரிய-சொத்து ஏதும் இவ்வுலகிலில்லை

    True.

    பதிலளிநீக்கு