திங்கள், டிசம்பர் 14, 2015

குறள் எண்: 0134 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமைகுறள் எண்: 0134}

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

விழியப்பன் விளக்கம்: வேதம் ஓதுவோர் - கற்றதை மறப்பின், மீண்டும் கற்றுக்கொள்ளலாம்; ஒழுக்கம் தவறினால், உயர்ந்த பிறப்பிலிருந்து தாழ்வர்.
(அது போல்...)
மனிதனாய் பிறந்தோர் - செய்கையில் குறையிருப்பின், திருத்திக் கொள்ளலாம்; மனதில் கறையிருந்தால், ஆறறிவு விலங்கிலிருந்து குறைவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக