வியாழன், டிசம்பர் 24, 2015

குறள் எண்: 0144 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0144}

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் 
தேரான் பிறனில் புகல்

விழியப்பன் விளக்கம்: திணையளவும் ஆராயாமல், பிறர் இல்லத்தாளிடம் விழைந்தால்; மலையளவு புகழுக்குரியர் ஆயினும், என்ன சிறப்பு?
(அது போல்...)
எள்ளளவும் மனிதமில்லாமல், பிறர் மனதைப் புன்படுத்தினால்; கடலளவு கல்விக்குரியவர் ஆயினும், என்ன பயன்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக