திங்கள், டிசம்பர் 21, 2015

குறள் எண்: 0141 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0141}

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்

விழியப்பன் விளக்கம்: அறம் மற்றும் பொருள் சார்ந்த உலகப்-பொதுமறையை ஆராய்ந்தவரிடம்; வேறொருவருடன் உறவிலுள்ள பெண்ணைக் காதலிக்கும் அறியாமை இருப்பதில்லை.
(அது போல்...)
பொறாமை மற்றும் பேராசை சார்ந்த பொது-நியதிகளை உணர்ந்தவர்களிடம்; மற்றவர்களிடம் இருக்கும் தனித்துவத்தைத் தூற்றும் எண்ணம் இருப்பதில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக