புதன், டிசம்பர் 30, 2015

குறள் எண்: 0150 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0150}

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

விழியப்பன் விளக்கம்: அறத்தை மனம்-கொள்ளாமல், அறமற்ற செயல்களே செய்பவர் ஆயினும்; பிறரை மணம்-கொண்டவளின், பெண்மையை விரும்பாத தன்மை நன்றாம்.
(அது போல்...)
பொதுநலத்தை எண்ணாமல், சுயநலமான காரியங்களே செய்பவர் ஆயினும்; பிறரின் சொத்துக்களை, அபகரிக்காத குணம் சிறப்பாம்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக