புதன், டிசம்பர் 09, 2015

குறள் எண்: 0129 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0129}

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

விழியப்பன் விளக்கம்: தீயால் வெந்த புண்ணால், உடலில் உருவான தழும்பு மாறிவிடும்; ஆனால் - தீச்சொற்களால் பாதித்த மனிதர்களுள், மனதில் உருவான வலி மாறிடாது.
(அது போல்...)
அடிதடியால் பிரிந்த உறவுகள், எலும்பில் எழுந்த முறிவை மறந்திடும்; ஆனால், வார்த்தைகளால் பிரிந்த உறவுகள்,  மனதில் எழுந்த முறிவை மறந்திடாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக