வியாழன், டிசம்பர் 31, 2015

குறள் எண்: 0151 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமைகுறள் எண்: 0151}

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

விழியப்பன் விளக்கம்: தன்னைத் தோண்டும் மக்களை, சுமக்கும் நிலத்திற்கு ஒப்ப; தீயசொற்களால் நம் மனதைக் காயப்படுத்துவோரை, பொறுத்தருளுதல் தனிச்சிறப்பாகும்.
(அது போல்...)
தம்மைக் கைவிட்ட பிள்ளைகளை, ஆசிர்வதிக்கும் பெற்றோர் போல்; புரளியால் நம் மதிப்பை சிதைப்போரை, அரவணைத்தல் தனித்துவமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக