செவ்வாய், டிசம்பர் 29, 2015

குறள் எண்: 0149 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0149}

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்

விழியப்பன் விளக்கம்: பிறர் இல்லத்தாளின் தோளைத் தீண்டாதவரே; அச்சுறுத்தும் கடலுக்கு நடுவே இருக்கும் இவ்வுலகில், நன்மைக்கு காரணமானர் ஆவர்.
(அது போல்...)
பிறர் சொத்துகளை அபகரிக்க முயலாதவரே; பயமுறுத்தும் கொள்ளையர்களுக்கு நடுவே வாழ்வோர் மனதில், நம்பிக்கையை விதைப்பவர் ஆவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக