வியாழன், டிசம்பர் 10, 2015

குறள் எண்: 0130 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0130}

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி 
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

விழியப்பன் விளக்கம்: சினத்தை அடக்கி, கல்வியைக் கற்று - அடக்கமுடன் இருப்போரைச் சேர்ந்திட; தகுந்த நேரத்திற்காக, அறம் காத்திருக்கும்.
(அது போல்...)
அன்பை உணர்ந்து, மனிதத்தை வளர்த்து -  வாழ்வியலைத் தொடர்வோரின் வருகைக்கு; அவரின் தன்னிறைவுக்காக, மரணம் காத்திருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக