வெள்ளி, டிசம்பர் 11, 2015

குறள் எண்: 0131 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமைகுறள் எண்: 0131}

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

விழியப்பன் விளக்கம்: ஒழுக்கம், ஒருவருக்கு ஒப்பற்ற மேன்மையைக் கொடுப்பதால்; ஒழுக்கம், உயிரைவிட உயர்ந்ததாய் காக்கப்பட வேண்டும்.
(அது போல்...)
பெற்றோர், பிள்ளைகளுக்கு ஒப்பற்ற தியாகத்தை அளிப்பதால்; பெற்றோரை, இயற்கையைவிட சிறந்ததாய் போற்ற வேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக