திங்கள், டிசம்பர் 07, 2015

குறள் எண்: 0127 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0127}

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

விழியப்பன் விளக்கம்: வேறெதை அடக்காவிட்டாலும், நாவடக்குதல் வேண்டும்; அப்படி அடக்காவிட்டால், சொற்பிழைகள் நிகழ்ந்து - துன்பத்தில் உழற்றும்.
(அதுபோல்)
வேறெதைப் பழகாவிட்டாலும், நேர்மையைப் பழகிடல் வேண்டும்; இல்லையேல், தவறான வழிசென்று - வாழ்க்கை தடம்புரளும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

2 கருத்துகள்:

  1. வேறெதைப் பழகாவிட்டாலும், நேர்மையைப் பழகிடல் வேண்டும்; இல்லையேல்,
    Will try.

    பதிலளிநீக்கு