திங்கள், டிசம்பர் 28, 2015

குறள் எண்: 0148 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0148}

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு

விழியப்பன் விளக்கம்: பிறர் மனைவியை - தவறான எண்ணத்துடன், பார்க்காத மதிப்பிற்குரிய ஆண்மை; சன்றோர்க்கு - அறம் மட்டுமல்ல, முழுமையான ஒழுக்கமும் ஆகும்.
(அது போல்...)
பிறர் உரிமையை - காழ்ப்பு உணர்வுடன், மறுக்காத சிறப்புக்குரிய மனிதம்; மனிதர்க்கு - அடிப்படை மட்டுமல்ல, புனிதமான பிறவிப்பயனும் ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக