செவ்வாய், பிப்ரவரி 02, 2016

குறள் எண்: 0184 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  019 - புறங்கூறாமைகுறள் எண்: 0184}

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்

விழியப்பன் விளக்கம்: பிறரின் முன் நின்று, கருணையில்லாமல் கூட பேசலாம்; ஆனால், புறம் நின்று; பின் விளைவை ஆராயாமல் - புறம் பேசுவதல் கூடாது!
(அது போல்...)
உறவில் இருந்து கொண்டு, பொறுமையில்லாமல் கூட நடத்தலாம்; ஆனால், பிரிந்து சென்று; பிரிவின் தன்மையை உணராமல் - குறை கூறுதல் தவறு!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக