செவ்வாய், பிப்ரவரி 23, 2016

குறள் எண்: 0205 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0205}

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து

விழியப்பன் விளக்கம்: இல்லை என்பதற்காய், தீயவினைகளைச் செய்யக்கூடாது; அப்படி செய்தால், இருக்கும் நிலையிலிருந்தும் - இல்லாமை மேலும் பெருகும்.
(அது போல்...)
இன்பமில்லை என்றென, உறவுகளை முறிக்கக்கூடாது; அப்படி முறித்தால், மற்ற உறவுகளிலும் - மகிழ்ச்சி குறையத் துவங்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக