புதன், பிப்ரவரி 24, 2016

குறள் எண்: 0206 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0206}

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

விழியப்பன் விளக்கம்: துன்பம் விளைவிக்கும் தீவினைகள், தம்மை நெருங்க விரும்பாதோர்; மற்றவருக்கு தீயவை செய்யாத, உறுதியுடன் இருக்கவேண்டும்.
(அது போல்...)
சந்தேகம் விதைக்கும் நிகழ்வுகள், தமக்கு நேர்வதை ஏற்காதோர்; பிறர்மேல் சந்தேகம் கொள்ளாத, வைராக்கியமுடன் இருக்கவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக