சனி, பிப்ரவரி 27, 2016

குறள் எண்: 0209 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0209}

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்

விழியப்பன் விளக்கம்: ஒருவர், தன் சுயத்தைக் காதலிப்பவர் ஆயின்; எத்தனை சிறியதே எனினும், தீயச் செயல்களை செய்யாமல் இருக்கவேண்டும்.
(அது போல்...)
ஒருவர், தன் தொழிலை நேசிபவர் ஆயின்; எந்த அளவானதே எனினும், விதி மீறல்களை செய்யாமல் இருக்கவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக