திங்கள், பிப்ரவரி 22, 2016

குறள் எண்: 0204 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0204}

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு

விழியப்பன் விளக்கம்: மறதியாகவும், பிறருக்கு தீவினை விளைவிக்க எண்ணக்கூடாது; அப்படி எண்ணுவோர்க்கு, அறத்தன்மையே தீவினை விளைவிக்க எண்ணும்.
(அது போல்...)
பிழையாகவும், நம்பியவர்க்கு துரோகம் செய்ய முயலக்கூடாது; அப்படி முயல்வோர்க்கு, விதியே துரோகம் செய்ய முயலும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக