வியாழன், பிப்ரவரி 25, 2016

குறள் எண்: 0207 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0207}

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென்று அடும்

விழியப்பன் விளக்கம்: எவ்விதமான பகையைக் கொண்டோரும், அதிலிருந்து மீள்வர்; ஆனால், தீவினைகளால் உருவான பகை, மறையாது பின்தொடர்ந்து அழிக்கும்.
(அது போல்...)
எவ்வகை தீப்பழக்கம் கொண்டோரும், அதை விட்டொழிப்பர்; ஆனால், போதையால் தொடர்ந்த தீப்பழக்கம், பின்விளைவாய் உருவாகி உயிரழிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக