சனி, பிப்ரவரி 13, 2016

குறள் எண்: 0195 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  020 - பயனில சொல்லாமைகுறள் எண்: 0195}

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

விழியப்பன் விளக்கம்: உயரிய குணங்களை உடையவர், பயனற்றச் சொற்களைப் பேசுவாராயின்; அவரின் மேன்மை, தனித்தன்மையுடன் சேர்ந்து நீங்கிவிடும்.
(அது போல்...)
அதிக தொகுதிகளை வென்றவர், பொதுநலமற்ற திட்டங்களை வகுப்பாராயின்; அவரது பதவி, ஆட்சிக்கட்டிலோடு சேர்த்து அகற்றப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக