சனி, பிப்ரவரி 20, 2016

எவர் அறியாமை இது???



         ஒரு வாரத்திற்கு முன்னர், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்; 1 கோடி மதிப்பிலான "வைர கிரீடத்தை" காணிக்கையாக... 

இல்லையில்லை!!!

"பரிசாக" அளித்தாராம்!
  • "பரிசு" தொகையே இவ்வளவு என்றபின்; இவ்வளவு இலாபத்தை "கொள்முதல் மூலம்" அளித்தவர்களின் அறியாமை என்பதா?
  • தன்னை நம்பி "தொழிலை" ஊக்குவித்த மக்களின் வயிற்றில் அடித்து - இப்படி "பயனற்ற" பரிசை "கடவுளுக்கு" அளித்த அறியாமையை! எண்ணி வருந்துவதா??
  • குறைந்த விலையில் விற்று நுகர்வோரின் "மேன்மையான ஆசிகளை" நேரடியாய்/உடனடியாய் பெற்று இருக்கலாமே? என்று ஆதங்கப்படுவதா???
இல்லை...
  • எல்லாவற்றையும் "பொறுப்பதோடு மட்டும் " நிற்காமல் "பொறுப்பில்லாமல்" இந்த பரிசையும் ஏற்ற "கடவுளின் அறியாமையை" குற்றம் சொல்வதா????
அடப் போங்கய்யா!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக