ஞாயிறு, பிப்ரவரி 07, 2016

குறள் எண்: 0189 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  019 - புறங்கூறாமைகுறள் எண்: 0189}

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் 
புன்சொல் உரைப்பான் பொறை

விழியப்பன் விளக்கம்: "பிறரைக் கொடுஞ் சொற்களால், புறம் பேசுவோரைச் சுமப்பதும் அறத்தன்மையே!" என்றெண்ணி தான், இப்புவித்தாய் சுமக்கிறதோ?
(அது போல்...)
"பிறகட்சிகளைத் பண்பற்ற முறையில், விமர்சித்துப் பேசுவோரை மன்னிப்பதும் இயலாமையே!" என்றுணர்ந்து தான், பொதுமக்கள் கடக்கிறார்களோ?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக