சனி, பிப்ரவரி 06, 2016

குறள் எண்: 0188 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  019 - புறங்கூறாமைகுறள் எண்: 0188}

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

விழியப்பன் விளக்கம்: தம் சுற்றத்தின் குற்றத்தையே, புறம் பேசும் இயல்புடையவர்கள்; அந்நியர்களின் செயல்பாடுளில், என்னதான் விமர்சிக்கமாட்டார்கள்?
(அது போல்...)
தம் கட்சியின் குறையையே, பழித்துப் பேசும் கட்சிக்காரர்கள்; புதுகட்சிகளின் குறைகளை, எப்படித்தான் பழிக்கமாட்டார்கள்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக