வெள்ளி, பிப்ரவரி 19, 2016

குறள் எண்: 0201 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0201}

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு

விழியப்பன் விளக்கம்: சிற்றின்பம் அளிக்கும் தீவினைகளைச் செய்ய - தீவினைகளைப் பழகியோர் அஞ்ச மாட்டார்கள்; ஆனால், உயர் பண்புகளைக் கொண்டோர் அஞ்சுவர்.
(அது போல்...)
பேராசை தரும் ஊழல்களைப் புரிந்திட - ஊழல்களில் மூழ்கியோர் வெட்கப்பட மாட்டார்கள்; ஆனால், பொது நலத்தை நேசிப்போர் வெட்கப்படுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக