திங்கள், பிப்ரவரி 01, 2016

குறள் எண்: 0183 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  019 - புறங்கூறாமைகுறள் எண்: 0183}

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கந் தரும்

விழியப்பன் விளக்கம்: புறம் பேசிவிட்டு, பொய்யாய் வாழ்வதை விட; இறந்துபோதல்; அறநூல்கள் எடுத்துரைக்கும் உயர்வைக் கொடுக்கும்.
(அது போல்...)
அன்பை அழித்துவிட்டு, வஞ்சனையாய் உறவாடுவதை விட; விலகிவிடுதல்; சான்றோர்கள் பரிந்துரைக்கும் நிறைவைக் கொடுக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக