புதன், பிப்ரவரி 17, 2016

குறள் எண்: 0199 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  020 - பயனில சொல்லாமைகுறள் எண்: 0199}

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

விழியப்பன் விளக்கம்: குழப்பம் எனும் அறியாமையை நீக்கிய, தேர்ந்த பகுத்தறிவாளர்கள்; பயனில்லாத சொற்களை, மறந்தும் பேசமாட்டார்கள்.
(அது போல்...)
மூர்க்கம் எனும் மிருகத்தன்மையை நீத்த, உயர்ந்த பண்பாளர்கள்; நேர்மையில்லாத செயல்களை, ஒருபோதும் செய்யமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக