புதன், பிப்ரவரி 03, 2016

குறள் எண்: 0185 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  019 - புறங்கூறாமைகுறள் எண்: 0185}

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்

விழியப்பன் விளக்கம்: பிறரைப் புரளிபேசும் இழிசெயலைக் கொண்டே; ஒருவர், அறவழியில் பயணிக்கும் நெஞ்சுறுதி கொண்டவர் அல்லர் - என்பது உணரப்படும்.
(அது போல்...)
பிறகட்சியைப் பொய்யாய் விமர்சிப்பதை வைத்தே; ஒருகட்சி, நேர்மையுடன் செயல்படும் கொள்கை உடையது அல்ல - என்பது அறியப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக