ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

குறள் எண்: 0210 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0210}

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் 
தீவினை செய்யான் எனின்

விழியப்பன் விளக்கம்: அறநெறி தவறிய பாதையில் பயணித்து, தீவினைகள் செய்யாதவராயின்; அவர், கேடு இல்லாதவர் என்பதை அறியவேண்டும்.
(அது போல்...)
சிந்தனை இழந்த நிலையில் வாழ்ந்து, போதைப்பொருட்கள் பழகாதவராயின்; அவர், சோம்பல் அற்றவர் என்பதை உணரவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக