திங்கள், பிப்ரவரி 29, 2016

குறள் எண்: 0211 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  022 - ஒப்புரவறிதல்குறள் எண்: 0211}

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு

விழியப்பன் விளக்கம்: ஒப்புரவு எனும் கடமைக்கு, பிரதிபலனை எதிர்பார்க்க வேண்டாம். இவ்வுலகம், மழைக்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்?
(அது போல்...)
விருந்தோம்பல் எனும் மேன்மைக்கு, சன்மானம் பெறுதல் வேண்டாம். பிள்ளைகள், தாய்மைக்கு என்ன பரிகாரம் செய்யமுடியும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக