ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

குறள் எண்: 0203 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0203}

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

விழியப்பன் விளக்கம்: அனைத்து விதமான அறிவுகளிலும் முதன்மையானது,; நமக்கு தீமை செய்தோர்க்கும், தீவினை செய்யாத பகுத்தறிவாகும்.
(அது போல்...)
எல்லா வகையான பண்புகளிலும் சிறப்பானது; நமக்கு அவமரியாதை இழைத்தோர்க்கும், அவமரியாதை இழைக்காத மனிதநேயமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக