வியாழன், செப்டம்பர் 07, 2017

குறள் எண்: 0767 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0767}

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து

விழியப்பன் விளக்கம்: தம்மை நெருங்கிய படைகளைத் தகர்க்கும், போர்முறைகளை அறிந்து; முதலில் வரும் படையைத் தகர்த்து, போர்க்களத்தில் முன்னேறிச் செல்வதே படையாகும்.
(அது போல்...)
மனதை ஈர்க்கும் தீமைகளைத் தடுக்கும், செயல்முறைகளைக் கற்று; முதலில் ஈர்க்கும் தீமையைத் தடுத்து, வாழ்க்கையில் உயர்ந்து செல்வதே ஒழுக்கமாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக