திங்கள், செப்டம்பர் 18, 2017

குறள் எண்: 0778 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0778}

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்

விழியப்பன் விளக்கம்: போரில் அழிவு நேரும்போது, அரசாள்பவர் சினந்து தடுத்தாலும்; உயிருக்கு அஞ்சாத செருக்குடைய போர்வீரர், தன் சிறப்பியல்பில் இருந்து விலகமாட்டார்!
(அதுபோல்...)
குடும்பத்தில் சிக்கல் நேரும்போது, குடும்பத்தினர் குழப்பம் விதைத்தாலும்; சூழலுக்கு பலியாகாத திட்பமுடைய குடும்பத்தலைவர், தன் உயர்குணத்தில் இருந்து மாறமாட்டார்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக