திங்கள், செப்டம்பர் 11, 2017

குறள் எண்: 0771 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0771}

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்

விழியப்பன் விளக்கம்: “எதிரிகளே! எம் தலைவரை எதிர்த்து, அவர்முன் போர்க்களத்தில் நிற்காதீர்! எம் தலைவரின் முன் நின்று, பலரும் கற்சிலைகளாக உள்ளனர்!” - என எச்சரிக்கை செய்வதே, படைச்செருக்கு ஆகும்.
(அது போல்...)
“துரோகிகளே! என் அப்பனை புறம்பேசி, அவர்முன் புகழ்ச்சி பேசாதீர்! என் அப்பனை புறத்தே பேசி, பலரும் வாழ்விழந்து இருக்கின்றனர்!” - என வீரமுடன் பேசுவதே, மகளதிகாரம் ஆகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக