வெள்ளி, செப்டம்பர் 08, 2017

குறள் எண்: 0768 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0768}

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்

விழியப்பன் விளக்கம்: போரிடத் தேவையான வீரமும் தற்காப்பும் இல்லாத போதும்; ஒன்றிணைந்த அணியாய் திரளும் குணத்தால், ஓர் படை மாட்சிமை பெறும்!
(அது போல்...)
இல்லறத்திற்குத் தேவையான அன்பும் புரிதலும் இல்லாத போதும்; கூட்டுக் குடும்பமாய் வாழும் ஒழுக்கத்தால், ஓர் குடும்பம் அற்புதமாக மாறும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக