செவ்வாய், செப்டம்பர் 19, 2017

குறள் எண்: 0779 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0779}

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்

விழியப்பன் விளக்கம்: உரைத்த சூளுரையைக் காக்க, போரில் சாகவல்ல செருக்கான வீரரை; ஒரு  பிழை செய்ததற்காய், எவரேனும் இகழ்வரோ?
(அது போல்...)
அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, தேர்தலில் தோற்கவல்ல செறிவான தலைவரை; கால தாமதம் செய்ததற்காய், எவரேனும் விமர்சிப்பரோ?
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக