புதன், செப்டம்பர் 13, 2017

குறள் எண்: 0773 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0773}

பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு

விழியப்பன் விளக்கம்: எதிரிகளைத் தாக்குவதில், இரக்கமின்றி இருப்பதை; அதீத வலிமை என்பர்! மற்றும், அதே எதிரிகள் இன்னல் படும்போது உதவுவதை; “வலிமையின் கூர்முனை” என்பர்!
(அது போல்...)
குழந்தைகளை வளர்ப்பதில், மன்னிப்பின்றி இருப்பதை; சிறந்த வளர்ப்புமுறை என்பர்! மற்றும், அதே குழந்தைகள் தோல்வி அடையும்போது அரவணைப்பதை; "வளர்ப்பின் உச்சம்" என்பர்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக