சனி, செப்டம்பர் 16, 2017

குறள் எண்: 0776 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0776}

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து

விழியப்பன் விளக்கம்: செருக்குடைய படைவீரர்கள் தம் வாழ்நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்கள் அனைத்தையும்; இறந்த நாட்களாய் கருதி, அவற்றைக் கழித்திடுவர்!
(அது போல்...)
சுயமுடைய தலைவர்கள் தம் செயல்களை மதிப்பிட்டு, அறவுணர்வு சேராத செயல்கள் யாவையும்; குற்றச் செயல்களாய் கருதி, அவற்றை நீக்கிடுவர்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக