வெள்ளி, செப்டம்பர் 15, 2017

குறள் எண்: 0775 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0775}

விழித்தகண் வேல்கொண்டி எறிய அழித்துஇமைப்பின்
ஒட்டுஅன்றோ வன்க ணவர்க்கு

விழியப்பன் விளக்கம்: வெற்றிக்காக விழித்திருக்கும் படைவீரரின் கண், எதிரி வேல் எறியும்போது; ஒருமுறை இமைத்தாலும், செருக்குடைய படைக்கு புறங்காட்டுதல் அன்றோ?
(அது போல்...)
வாய்ப்புக்காகக் காத்திருக்கும் உறுப்பினரின் நேர்மை, சூழல் அழுத்தம் தரும்போது; ஒருமுறை தவறினாலும்; ஒழுக்கமுடைய குடும்பத்துக்கு தேசக்குற்றம் தானே?
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக