செவ்வாய், நவம்பர் 03, 2015

குறள் எண்: 0093 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0093}

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்

விழியப்பன் விளக்கம்: முகம் மலர்ந்து, மகிழ்ச்சியுடன் பிறரைப் பார்த்து; உள்ளத்தில் இருந்து நேயத்துடன் பேசுவதே, அறம் எனப்படும்.
(அது போல்...)
கடமை உணர்ந்து, பொறுப்புடன் மக்களைக் காத்து; வாய்மையில் பயணித்து அறத்துடன் நடப்பதே, அரசாட்சி எனப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக