புதன், நவம்பர் 11, 2015

குறள் எண்: 0101 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0101}

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

விழியப்பன் விளக்கம்: நாம் உதவிடாத ஒருவர் செய்த உதவிக்கு; இந்த மண்ணுலகும், விண்ணுலகும் சேர்ந்தே கொடுத்தும் - இணையாகாது.
(அது போல்...)
நம்மிடம் எந்த பிரதிபலனையும் எதிர்பாராத தாய்க்கு; நம் உடலையும், உயிரையும் சேர்ந்தே கொடுத்தும் - பிரதிபலனாகாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக