சனி, நவம்பர் 07, 2015

குறள் எண்: 0097 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0097}

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்

விழியப்பன் விளக்கம்: பிறர்க்கு பலனை விளைவிக்கும் எண்ணத்திலிருந்து, மாறுபடாத பேச்சு; நல்வினைகளை விளைவித்து, அறத்தை நிலைநாட்டும்.
(அது போல்...)
பிறரின் வாழ்வை உயர்விக்கும் வைராக்கியத்திலிருந்து, விலகிடாத முனைப்பு; மனிதத்தைப் பெருக்கி, சமூகத்தைத் திடப்படுத்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக