வெள்ளி, நவம்பர் 27, 2015

குறள் எண்: 0117 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0117}

கெடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

விழியப்பன் விளக்கம்: நடுநிலைமையோடு வாழ்ந்தும், வறுமையில் வாடுபவரை; ஒருபோதும் - இவ்வுலகம் கெடுதலாய் எண்ணி, தூற்றாது.
(அது போல்...)
அறநெறியோடு அரசாண்டும், சிக்கலில் இருப்போரை; எந்நிலையிலும் - மக்கள் தீயவராய் எண்ணி, பேசமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக