வியாழன், நவம்பர் 19, 2015

குறள் எண்: 0109 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0109}

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த 
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

விழியப்பன் விளக்கம்: ஒருவர் செய்திட்ட நன்மையொன்றை நினைத்தால்; அவர் கொன்றதற்கு இணையான துன்பமே செய்தாலும், அந்த துன்பம் மறையும்.
(அது போல்...)
ஒரேயொரு நிகழ்வில் கடவுளை உணர்ந்தால்; கடவுள் படங்களை உடைக்கும் அளவிலான கடவுள்-மறுப்பும், இருந்த தடமின்றி அழியும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக