செவ்வாய், நவம்பர் 17, 2015

குறள் எண்: 0107 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0107}

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

விழியப்பன் விளக்கம்: அறமறிந்தோர் - தம்முடைய துன்பத்தை நீக்கியவரின் நட்பை; பிறக்கமுடிந்த ஏழு பிறப்பிலும் உணர்வர்.
(அது போல்...)
அன்பறிந்தோர் - தம்முடைய உயிரைத் தாங்கியவளின் உறவை; பிறக்கமுடிந்த எல்லாப் பிறப்புகளிலும் வேண்டுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக