வெள்ளி, நவம்பர் 13, 2015

குறள் எண்: 0103 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0103}

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

விழியப்பன் விளக்கம்: பிரதிபலனை எதிர்பாராதோர் செய்த உதவியின், நேயத்தை ஆராய்ந்தால்; அதன் நன்மை, கடலை விடப் பெரியதாகும்.
(அது போல்...)
சுயநலத்தை நாடாதோர் ஆண்ட ஆட்சியின், தன்மையைப் பின்பற்றினால்; அதன் விளைவு, வல்லரசை விடச் சிறந்திருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக