திங்கள், நவம்பர் 09, 2015

குறள் எண்: 0099 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0099}

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்கு வது

விழியப்பன் விளக்கம்: நேயம்மிக்க சொற்கள் விளைவிக்கும் நற்பயன்களை அனுபவித்தவர்; என்ன பயனுக்காக, கொடிய வார்த்தைகளை உதிர்க்கமுடியும்?
(அது போல்...)
நேர்மையான ஆட்சி விளைவிக்கும் அழியாப்புகழை உணர்ந்தவர்; என்ன புகழுக்காக, அறமற்ற ஆட்சியை வழங்கமுடியும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக