புதன், நவம்பர் 25, 2015

குறள் எண்: 0115 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0115}

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 
கோடாமை சான்றோர்க் கணி

விழியப்பன் விளக்கம்: அழிவும்/ஆக்கமும் இல்லாத, வாழ்க்கை ஏதுமில்லை என்பதால்; உள்ளத்தால்  நடுநிலைமையை தவறாதிருத்தலே, சான்றோர்க்கு அணிகலனாகும்.
(அது போல்...)
தோல்வியும்/வெற்றியும் இல்லாத, விவாதம் எதுவுமில்லை என்பதால்; விவாதத்தில் சாடுதலைத் தவிர்த்தலே, வாதிடுவோர்க்கு சிறப்பாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக