வியாழன், நவம்பர் 12, 2015

குறள் எண்: 0102 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0102}

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

விழியப்பன் விளக்கம்: வேறுவழியே இல்லாத வேளையில், செய்யப்பட்ட உதவி எத்தனை சிறியதாயினும்; அது மண்ணுலகை விட மிகப்பெரியது.
(அது போல்...)
வாழ்வே முடிந்ததான சூழலில், மறுவாழ்வளித்த உறவு எவ்வளவு விலகியிருப்பினும்; அது எல்லா உறவுகளிலும் முதன்மையானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக