வெள்ளி, நவம்பர் 20, 2015

குறள் எண்: 0110 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0110}

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

விழியப்பன் விளக்கம்: எந்த நல்வினைகளை மறந்தார்க்கும் மீள்-வழி உண்டாம்; ஆனால், ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு மீள்-வழியில்லை.
(அது போல்...)
எந்த உறவை உதறியவர்க்கும் விமோச்சனம் உண்டாம்; ஆனால், தன் பெற்றோரை உதறியவர்க்கு விமோச்சனம் ஏதுமில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக