திங்கள், நவம்பர் 30, 2015

குறள் எண்: 0120 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0120}

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் 
பிறவும் தமபோல் செயின்

விழியப்பன் விளக்கம்: நடுநிலையோடு - பிறர் பொருளையும், தம் பொருளாய் கருதுவதே; வியாபாரம் செய்வோருக்கு, சிறந்த வியாபார யுக்தியாகும். 
(அது போல்...)
பேரன்போடு - பிற குழந்தைகளையும், நம் குழந்தைகளாய் பேணுவதே; குழந்தை வளர்ப்போர்க்கு, தேவையான வளர்ப்பு நெறியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக